அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்)

சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும்…

அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) Read More

`குட்டி´ (திரைப்படம்)

குட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதை…

`குட்டி´ (திரைப்படம்) Read More

சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்)

குடும்பம் என்றால் என்ன? மனைவி பணிவிடை செய்ய, கணவன் ராஜாங்கம் நடத்த ஏதோ ஒரு கட்டாய நிகழ்வுகளினூடான வாழ்வின் நகர்வுதான் குடும்பமா? குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு கதம்பம். குடும்பம் என்னும் கோயிலில் விளக்கேற்ற வந்தவள் பெண். பெண் தெய்வத்துக்குச் சமமானவள். என்றெல்லாம் ஏட்டிலும் எழுதி…

சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) Read More

பாவை என்று சொல்லாதே என்னை!

சந்திரவதனாவின் “பாவை என்று சொல்லாதே என்னை” பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக்…

பாவை என்று சொல்லாதே என்னை! Read More

கரண்டி

‘அக்கா, அக்கா…’ மெல்லிய, இனிய அந்தக் குரல் மணிமேகலையி னுடையது தான். நான் அவசரமாய் எழுந்து எனது அறை மேசையில் ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த நீள் சதுரத் தட்டை (TRAY) எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். என்னவனும், குழந்தைகளும் இன்னும் கட்டில்களிலேயே. மணிமேகலை வர முன் ஆயத்தமாகி விட வேண்டுமென்ப தால் நான் அரை மணி முன்…

கரண்டி Read More
Captain Mayuran (Saba), Captain Morris (Parathan), Bhama (1979)

அம்மாவின் கனவுகள்

அம்மாவிடம் போகும் போது பெரும்பாலும் தொலைபேசியில் அழைத்து “சிறிது நேரத்தில் வருகிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் போவேன். நான் அங்கு போகும் போது தொலைக்காட்சியில் (தமிழ்) குடும்பச்சண்டை, பழிவாங்கல், ஏமாற்றுதல், அழுகை… என்று ஏதாவது போய்க் கொண்டிருக்கும். மேசையில் ஏதாவதொரு புத்தகம்…

அம்மாவின் கனவுகள் Read More
Station Master M. S. Thiyagrajah

கணவாய்க் கறியும் அப்பாவும்

எனது அப்பா, விடுமுறையில் வீட்டுக்கு வந்து நிற்கும் போதெல்லாம் வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் அம்மாவுடன் இணைந்து விடுவார். அரிசியில் கல்லுப் பொறுக்குவதிலிருந்து கிணற்றடியில் அம்மாவுடன் இருந்து உடுப்புகளுக்குச் சவர்க்காரம் தேய்த்து, உடுப்புகளை அலசிப் பிழிந்து, கொடியில் காய விடுவது வரை வீட்டின் எல்லா வேலைகளிலுமே அவர் கைகளும்…

கணவாய்க் கறியும் அப்பாவும் Read More

அந்த நாட்கள்

பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போய் விட்டது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டிவிட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச்…

அந்த நாட்கள் Read More

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப் பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு…

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் Read More

கெளதமி காத்திருந்தாள்

போர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள். மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள் சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள் பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக் குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

கெளதமி காத்திருந்தாள் Read More