பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில்…

பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் Read More

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன…

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்… Read More

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்!

அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல் இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் புலனாய்வுப் போராளிகளை உபசரித்து,
பாதுகாத்து அனுப்பியுமிருந்தார்…

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்! Read More

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில்…

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ் Read More

உன்னைக் கண்டு நானாட…

அன்றிரவு சப்பல் அடி. பூவரசந்தடியா, கிளிசரியாத்தடியா அல்லது வாதநாரயணித்தடியா என்பது ஞாபகத்தில் இல்லை. மெல்லிய சுள்ளிப் பச்சைத்தடி. அம்மா முதலில் ஆத்திரம் தீரு மட்டும் விளாசித் தள்ளி விட்டா. பின்னர் என்னை அடித்ததற்காகவும் நான் காதலிப்பதற்காகவும் அழுது கொண்டிருந்தா. நான் அடியின் …

உன்னைக் கண்டு நானாட… Read More

யார் மனதில் யார் இருப்பார்..!

பிரியமானவர்களோ அன்றில் முக்கியமான வர்களாக நாம் கருதுபவர்களோ எம்மைக் கண்டு கொள்ளாதிருப்பதை விட, எம் மேல் பிரியமானவர் களையோ அன்றில் எம்மை நேசிப்பவர்களையோ நாம் கண்டு கொள்ளாமலோ கருத்தில் கொள்ளா மலோ விட்டு விடுவது கவலைக்குரியது. அவர்களை மீண்டும் ஒரு முறை …

யார் மனதில் யார் இருப்பார்..! Read More

காதலினால் அல்ல

புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வ தாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரிய வில்லை. நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. …

காதலினால் அல்ல Read More