“உனக்குத் தெரியுமோ குதிரைச்சவாரி சரியான இதமானது. இன்பமானது. அந்தப் பொழுதுகளில் நான் இனியில்லை எண்ட அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பன்“ மிருகங்களைத் தூர இருந்து இரசிப்பதில் மட்டுமே விருப்பமுடைய எனக்கு அன்ரோனெலாவின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது. அவள் கண்களை மூடிச் சுகித்த படி தொடர்ந்தாள் “குதிரைக்குக் குளிக்க வார்க்கிற பொழுது ஒரு வாசம் வருமே! அது மிக மிகச் சுகமானது“ மிருகங்களைத் தொடுவதோ, தடவுவதோ என்னால் முடியாத காரியம். எனக்கு அது அருவருப்பான ஒரு விடயமும் கூட. இவளுக்கு குதிரை குளிக்கிற பொழுது வருகிற வாசம் பிடிக்குதாம். “நான் குதிரையைச் சுத்தம் செய்து முடிஞ்சதும், அது தன்ரை பின்னங்கால்களை மடிச்சு, மண்டியிட்டு நன்றி சொல்லுமே, அப்ப எனக்கு உச்சி குளிரும்“ “உண்மையாகத்தான் சொல்லுறியோ?“ நம்ப முடியாது கேட்டேன். “ஓம் உண்மை“ “ஒவ்வொருமுறையும் நீ சுத்தம் செய்த பிறகு அது மண்டியிடுமோ? “ஓம் மண்டியிடும். அது ஒரு ஆனந்தமான பொழுது.“ எனக்கு அது ஆச்சரியமான பொழுது. மனசுக்குள் அவளை விசித்திரமாக உணர்ந்தேன். அன்ரோனெலா இத்தாலி நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் வேலை செய்யும் வங்கியின் மேலதிகாரி ஒருவரின் காரியதரிசி. யேர்மனிய மொழியை மிகச் சரளமாகப் பேசக் கூடியவள். அவளது முகத்தைப் பார்க்காமல் தொலைபேசியில் பேசும் எவரும் அவளை இத்தாலி நாட்டவள் என்று கண்டு பிடிக்க மாட்டார்கள். அத்தனை நேர்த்தியாக யேர்மனிய மொழியை உச்சரிப்பாள். நேரே பார்த்தால் மட்டும் ஏதோ ஒன்று அவள் யேர்மனியைச் சேர்ந்தவள் அல்ல என்று காட்டிக் கொடுத்து விடும். அழகானவள். ஆனால் குள்ளமானவள். Read more
அவன் ஆம்பிளை! நான் பொம்பிளை!
சந்திரவதனா
manaosai