பூநகரி கிராஞ்சியில் 2800 ஆண்டுகள் தொன்மையானதென காபன்-14 காலக்கணிப்பு செய்யப்பட்ட சுடுமண் கிணறு இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் ஒரு சுடுமண் கிணறு எடுக்கப்பட்டு சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தினால் கொண்டு செல்லப்ட்டது. இந்தியாவில் அஸ்தினாபுரத்திலும் தமிழகம் திருநெல்வேலி காயல் அதிச்சநல்லூர் ஆற்காடு செங்கமேடு ஆகியவற்றில் 2800 ஆண்டுகள் தொன்மையான சுடுமண் வளையக் கிணறுகள் எடுக்கப்ட்டன. தற்போது தண்ணிமுறிப்பில் கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் வளையக்கிணறு தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரனின் ஒருங்கிணைப்பில் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணம் குழுவினரால் அகழ்வு செய்யப்ட்டது.
வவுனியாவிலிருந்து சுகுணன் - 29.8.2003
வன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு
சுகுணன்
கட்டுரை/Article/Artikel